செய்திகள்
மீஞ்சூர் அருகே ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே பம்ப் ஸ்டவ் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவரது மனைவி கனகவல்லி (41). கடந்த மாதம் 25-ந் தேதி கியாஸ் காலியாகி விட்டதால் சமையல் செய்வதற்காக பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். காற்று அடிக்கும் போது திடீரென ஸ்டவ் வெடித்து கனகவல்லி மீது தீ பரவியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). இவரது மனைவி கனகவல்லி (41). கடந்த மாதம் 25-ந் தேதி கியாஸ் காலியாகி விட்டதால் சமையல் செய்வதற்காக பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். காற்று அடிக்கும் போது திடீரென ஸ்டவ் வெடித்து கனகவல்லி மீது தீ பரவியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.