செய்திகள்
புதுமடம் பஞ்சாயத்து பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை
புதுமடம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிகமான மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிகமான மீனவர்கள் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பனைக்குளம்:
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிகமான மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிகமான மீனவர்கள் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதுமடம் ஊராட்சி மன்றத் தலைவரும், தி.மு.க. மண்டபம் ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு செயலாளருமான காமில் உசேன், காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வை நேரடியாக சந்தித்து மனு அளித்தார். அதில் புதுமடம் பகுதியில் தடுப்பூசிகள் செலுத்திட மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுபோல் மண்டபம் ஒன்றிய புதுமடம் கவுன்சிலர் அஜ்மல்கான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.