செய்திகள்
மாயம்

திருக்குறுங்குடி அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2021-06-04 09:29 GMT   |   Update On 2021-06-04 09:29 GMT
திருக்குறுங்குடி அருகே பாட்டி வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு: 

திருக்குறுங்குடி அருகே உள்ள சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் உதயராஜ். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் வள்ளியூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் கடந்த 31-ம் தேதி காலையில் ஆன்லைன் கிளாசில் கலந்து கொள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக, தாயார் செல்வியிடம் கூறி விட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனைதொடர்ந்து செல்வி பாட்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது மாணவி அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். 

ஏர்வாடி இன்ஸ்பெக்டர் அய்யப்பன், திருக்குறுங்குடி சப்-&இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News