செய்திகள்
ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

பாளையங்கோட்டையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி

Published On 2021-06-02 10:56 GMT   |   Update On 2021-06-02 10:56 GMT
தண்டவாள பராமரிப்பு பணிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நெல்லை:

பாளையங்கோட்டையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை அருகே நெல்லை-திருச்செந்தூர் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்று பராமரிப்பு பணி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வாகனங்கள் செல்லவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன.

இந்த பராமரிப்பு பணிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு தான் பராமரிப்பு பணிக்கு ஊழியர்கள் வந்தனர். இதனால் காலை 8 மணி முதல் 10 மணிவரை அந்த பாதையில் ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. அதன்பின்னர் ரெயில்வே கேட் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது.
Tags:    

Similar News