செய்திகள்
தற்கொலை

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்- தனியார் வங்கி மேலாளர் தற்கொலை

Published On 2021-06-01 10:11 GMT   |   Update On 2021-06-01 10:11 GMT
கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனியார் வங்கி மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

மதுரையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவரது மனைவி ஹேமலதா (29). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி புளியம்பட்டியில் தங்கி தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்தார். அதற்காக ராஜேஷ் தனது நண்பர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. 

அதனை நினைத்து அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News