செய்திகள்
சென்னை தலைமை செயலகம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published On 2021-05-29 08:32 GMT   |   Update On 2021-05-29 15:24 GMT
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 12 பேரில் 3 பேருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வும், 9 பேருக்கு பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தீயணைப்புத்துறை  டி.ஜி.பி-யாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக ஏ.கே.விஸ்வனாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபி-யாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி-யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி-யாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News