செய்திகள்
கோவை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கோவை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி:
கோவை சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர். அப்போது அப்பநாயக்கன்பட்டி கல்லுக்குழி பகுதியில் சூலூரை சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கல்லுகுழியில் குளிக்க வருபவர்களிடம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.