செய்திகள்
ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு: அங்கீகரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி, அனுபவம் கிடையாது என சென்னை உயர்நிதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் நேரடியாக, தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பட்டங்களை அங்கீகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ‘‘ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது. தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி, அனுபவம் கிடையாது. மத்திய அரசு அனுமதிக்கும் வரை அங்கீகாரம் அளிக்க முடியாது’’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை என நீதிமன்றத்தில் யு.ஜி.சி. தகவல் தெரிவித்துள்ளது.