செய்திகள்
பாளையங்கோட்டை அருகே முதியவர் திடீர் மரணம்
பாளையங்கோட்டை அருகே முதியவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 80). இவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்து, பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் நேற்று ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென இறந்துகிடந்தார். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.