செய்திகள்
கொரோனா பரிசோதனை

அரக்கோணம் பகுதியில் காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றிய 30 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-05-18 11:12 GMT   |   Update On 2021-05-18 11:12 GMT
அரக்கோணம் பகுதியில் காரணமின்றி மோட்டார்சைக்கிள்களில் மாவட்ட எல்லையை கடக்க முயன்ற 30 பேருக்கு சுகாதாரத் துறையினரும், தாலுகா போலீசாரும் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தன.
அரக்கோணம்:

அரக்கோணம்-திருத்தணி சாலையில் இரட்டைக்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த 2 மோட்டார்சைக்கிள்கள் வந்தன. அதற்குரிய ஆவணங்களை போலீசார் கேட்டபோது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரணமின்றி மோட்டார்சைக்கிள்களில் மாவட்ட எல்லையை கடக்க முயன்ற 30 பேருக்கு சுகாதாரத் துறையினரும், தாலுகா போலீசாரும் சேர்ந்து கொரோனா பரிசோதனை செய்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News