செய்திகள்
கடைகளுக்கு சீல்

சோளிங்கரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைகளுக்கு சீல்

Published On 2021-05-18 11:05 GMT   |   Update On 2021-05-18 11:05 GMT
சோளிங்கர் பஜார் பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்கெட்டில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலாக இருந்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சோளிங்கர்:

சோளிங்கர் பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சோளிங்கர் பஜார் பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்கெட்டில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலாக இருந்த 2 கடைகளுக்கு தாசில்தார் ரவி, அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் சீல் வைத்து அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களையும்‌ எச்சரித்து அனுப்பினர். தினசரி மார்கெட்டை வாரச்சந்தைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண், ராஜ்குமார் உடனிருந்தனர்.
Tags:    

Similar News