செய்திகள்
கைது

ஆலங்குளம் தனியார் நிறுவன மேலாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-05-18 09:55 GMT   |   Update On 2021-05-18 09:55 GMT
ஆலங்குளம் தனியார் நிறுவன மேலாளர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த மார்ச் 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது அவரது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டி கொன்றது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக கார்த்திக் (22), சத்யா (21), காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 பேர் அம்பை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கின் நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கண்னன் என்ற சுரேஷ் கண்ணன் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று நள்ளிரவு ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News