செய்திகள்
நீதிபதி நீஷ்

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு நீதிபதி பலி

Published On 2021-05-17 20:38 GMT   |   Update On 2021-05-17 20:38 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு நீதிபதி ஒருவர் இறந்து உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் நீஷ் (வயது 42). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 26-ந்தேதி பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் நீதிபதி நீஷ் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு, தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீஷ் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த 1-ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நீஷ் பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
Tags:    

Similar News