செய்திகள்
சாலையில் வீசப்படும் தக்காளி பழங்கள்
விலை சரிவடைந்ததால் பல்லடம் பகுதியில் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் வீசும் அவலம் நிலவுகிறது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பறிப்புக்கூலிக்கு கூட கட்டுபடியாவதில்லை என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சில விவசாயிகள் பறித்த தக்காளிகளை சாலையோரம் வீசி செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி 14 கிலோ கொண்ட டிப்பர் ஒன்று, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டிப்பர் 150 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றனர்.