செய்திகள்
வலங்கைமான் பேரூராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலங்கைமான்:
வலங்கைமான் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முன்னதாக சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.