செய்திகள்
பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நோக்கில் செட்டிகுளம் சித்த மருத்துவமனை மற்றும் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் இலவசமாக கபசுர குடிநீர் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
பாடாலூர்:
கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் நோக்கில் செட்டிகுளம் சித்த மருத்துவமனை மற்றும் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் இலவசமாக கபசுர குடிநீர் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது. இதில் நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டர்.