செய்திகள்
மரணம்

ஆலாந்துறை அருகே நீச்சல் குளத்தில் டைவ் அடித்த போது தலையில் அடிப்பட்டு வாலிபர் பலி

Published On 2021-05-14 10:14 GMT   |   Update On 2021-05-14 10:14 GMT
ஆலாந்துறை அருகே நீச்சல் குளத்தில் டைவ் அடித்த போது தலையில் அடிப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கரும்புக்கடை சலமத் நகரை சேர்ந்தவர் ரியாசுதீன் (வயது 37). இவர் சுந்தராபுரம் பகுதியில் எலக்ட்ரீக்கள் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் ஆலாந்துறை கைகாட்டி பிரிவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்றார்.

அங்கு ரியாசுதீன் நீச்சல் குளத்தை கண்டதும் அதில் குளிக்க சென்றார்.

அப்போது அவர் மேலே இருந்து நீச்சல் குளத்தில் டைவ் அடித்தார். இதில் எதிர்பாராத விதமாக அவரது தலை நீச்சல் குளத்தின் தரையில் பட்டது.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைக்கண்டு அதிர்சச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ரியாசுதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .

இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News