செய்திகள்
திருவையாறு அருகே மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டி பறிமுதல்- ஒருவர் கைது
திருவையாறு அருகே மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்தவர் குமார் மகன் கஜேந்திரன்(27). இவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டு நடுக்கடை மெயின்ரோட்டில் வரும்போது. பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மறித்து சோதனை செய்தபோது அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது.
மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.