செய்திகள்
தற்கொலை

சேலத்தில் கோவிலில் தொழிலாளி தற்கொலை

Published On 2021-05-10 16:28 GMT   |   Update On 2021-05-10 16:28 GMT
சேலத்தில் கோவிலில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் கதிரவன் (வயது 20). ஈரோட்டில் தறித்தொழிலாளியாக வேலை பார்த்த அவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News