செய்திகள்
கொள்ளை

பீளமேடு அருகே தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளை

Published On 2021-05-10 09:41 GMT   |   Update On 2021-05-10 09:41 GMT
பீளமேடு அருகே தொழில் அதிபர் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீளமேடு:

கோவை துடியலூர் அருகே உள்ள ஸ்ரீவஸ்தா கார்டனை சேர்ந்தவர் ராஜா (வயது 51). தொழில் அதிபர். இவர் பீளமேடு திருமுருகன் நகரில் மார்பில்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்வதற்காக அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் அலுவலகத்தை வழக்கம் போல பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கள்ளாவில் இருந்து ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் அலுவலகத்தை திறக்க வந்த ராஜா கள்ளாவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News