செய்திகள்
அமைச்சர் மதிவேந்தன்

அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-10 05:23 GMT   |   Update On 2021-05-10 05:23 GMT
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
சென்னை:

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
Tags:    

Similar News