செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

Published On 2021-05-08 14:04 GMT   |   Update On 2021-05-08 14:04 GMT
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு நடத்தினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்றும், நாளையும் 24 மணிநேரமும் பேருந்துகளை இயக்கி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே சென்னையில் இருந்து கிளம்பும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மும்மடங்கு வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

முன்னதாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
Tags:    

Similar News