செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

Published On 2021-05-06 13:43 GMT   |   Update On 2021-05-06 13:43 GMT
கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை:

தென்காசியை சேர்ந்த 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி ஒரு 2 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவை ரத்தினபுரியில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தனது குழந்தைகளுடன் தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வந்த திருமணமான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே தென்காசிக்கு சென்ற அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கோவைக்கு அழைத்து வந்தார். அவர் தனது மனைவியிடம் வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்வை கைவிடுமாறு கூறினார்.

ஆனால் தொடர்ந்து இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து இளம்பெண் தனது கள்ளகாதலனிடம் தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார்.

இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை அழைத்து செல்வதற்காக கோவைக்கு வந்தார். பின்னர் அவரது கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற வாலிபர் இளம்பெண்ணை அவரது 2 குழந்தைகளுடன் அழைத்துக்கொண்டு தலைமறைவானார்.

வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆய்வு செய்த போது அவரது மனைவி வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை பார்த்தார். அதில் உங்களுடன் எனக்கு சேர்ந்து வாழ விரும்பம் இல்லை. எனவே நான் காதலிக்கும் வாலிபருடன் குழந்தைகளுடன் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். என எழுதி இருந்தார்.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News