செய்திகள்
கோப்புபடம்

திருவையாறு பகுதியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு - அதிகாரிகள் சுகாதார நடவடிக்கை

Published On 2021-05-06 13:22 GMT   |   Update On 2021-05-06 13:22 GMT
திருவையாறு பகுதியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருவையாறு:

திருவையாறு வடக்கு வீதியில் ஒருவருக்கும், கல்யாணபுரத்தில் ஒருவருக்கும், வரகூரில் ஒருவருக்கும், கருப்பூரில் ஒருவருக்கும், கழுமங்கலத்தில் ஒருவருக்கும், செம்மங்குடியில் ஒருவருக்கும் ஆக மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 6 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளவும் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News