செய்திகள்
கைது

அனுமதி இல்லாமல் லிபியா நாட்டில் இருந்து வந்த வாலிபர் கைது

Published On 2021-04-25 08:23 GMT   |   Update On 2021-04-25 08:23 GMT
அனுமதி இல்லாமல் லிபியா நாட்டில் இருந்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருமங்கலம்:

சென்னையைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது26). இவர் லிபியா நாட்டில் இருந்து துபாய் வழியாக விமானம் மூலம் மதுரை வந்தார். இவர் லிபியாவில் இருந்து அனுமதி இல்லாமல் மதுரைக்கு வந்ததாக குடிபுகல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News