செய்திகள்
நெல்லை அருகே தீக்குளித்து வாலிபர் பலி
நெல்லை அருகே வாலிபர் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் மணிகண்டன் (வயது 20). இவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கண்டித்து உள்ளனர்.
இதில் மனம் உடைந்த மணிகண்டன் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.