செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.47½ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-04-23 02:47 GMT   |   Update On 2021-04-23 02:47 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதம் தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் காணிக்கையாக ரூ.47 லட்சத்து 62 ஆயிரத்து 487, 81 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தது.
Tags:    

Similar News