செய்திகள்
கைது

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-04-21 09:44 GMT   |   Update On 2021-04-21 09:44 GMT
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அருகில் உள்ள கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 12ந்தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

இதனால் அதற்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அதன் பின்னர் பெற்றோர் விசாரித்ததில் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெயக்குமார்(33) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசில் அவரது தந்தை புகார் செய்தார். இதில் தனது மகளை திருமண ஆசை வார்த்தைகள் கூறி ஜெயக்குமார் என்பவர் கடத்தி சென்றுள்ளதாகவும் மகளை மீட்டு தரும்படியும் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் மற்றும் போலீசார் இருவரையும் தேடிவந்த நிலையில் கோயமுத்தூர் அருகே உள்ள அவினாசியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் முத்துப்பேட்டைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மாணவியை திருமண ஆசை வார்தை கூறி கடத்தி சென்ற ஜெயக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News