செய்திகள்
திருட்டு

காரிமங்கலத்தில் தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-04-21 09:25 GMT   |   Update On 2021-04-21 09:25 GMT
காரிமங்கலத்தில் தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தைக்கு சென்று ஆடு வாங்கி கொண்டு மீண்டும் திரும்பி வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News