செய்திகள்
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நடு பூலாங்குளத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவரது மகன் சுரேஷ்குமார்(வயது 38). இவர் அந்த பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.