தஞ்சையில் ரெயிலில் அடிப்பட்டு முதியவர் பலி- போலீசார் விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சை ரெட்டிப்பாளையம் அருகே திருப்பதிநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கால் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், ஏட்டுக்கள் அன்பழகன், சரவண செல்வன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டவாளத்தை கடக்க முயலும்போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.