செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-17 09:24 GMT   |   Update On 2021-04-17 09:24 GMT
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 526 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 25 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News