செய்திகள்
கொரோனா வைரஸ்

ஊழியருக்கு தொற்று- அவினாசி தாசில்தார் அலுவலகம் மூடல்

Published On 2021-04-12 09:48 GMT   |   Update On 2021-04-12 12:08 GMT
அவினாசி தாசில்தார் அலுவலகம் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

அவினாசி:

தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பணியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி தாசில்தார் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் கருவலூர் பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவினாசி தாசில்தார் அலுவலகம் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை சான்றிதழ் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அவினாசி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அலுவலக வளாகத்திற்குள் உள்ள இ-சேவை மையம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கிளை சிறை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News