செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் இன்று 3,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

Published On 2021-04-07 12:12 GMT   |   Update On 2021-04-07 12:12 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 17 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டது.
 
அதன்படி, தமிழகத்தில் இன்று 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 27,743 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,824 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,70,546 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News