வல்லம் புதூரில் மது பாட்டில்களை பதுக்கிய 2 பேர் கைது
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் புதூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது வல்லம்புதூர் சாலையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் வல்லம் புதூரை சேர்ந்த கர்ணன்(வயது42) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 65 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே உள்ள ஆலக்குடி பகுதியில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டபோது அந்த பகுதியில் சிலர் மது பாட்டில்களை வாங்கி செல்வதை பார்த்தனர். அங்கு மதுபாட்டில்களை விற்றவரை பிடித்து விசாரித்ததில் அவர் ஆலக்குடியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை (வயது 65) கைது செய்தனர்.