செய்திகள்
அல்லிகுண்டம் மலையில் தீப்பற்றி எரிந்ததை காணலாம்

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீர் தீ

Published On 2021-04-03 11:31 GMT   |   Update On 2021-04-03 11:31 GMT
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரின் அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலையில் இருந்த நாணல்புற்கள் காய்ந்து இருந்ததால் தீ மலை முழுவதும் பரவியது.

மேலும் மலையில் இருந்த அனைத்து மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் இது தீயை அணைக்க அவர்கள் முன் வரவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறினர்.
Tags:    

Similar News