செய்திகள்
கைது

தூத்துக்குடி அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது

Published On 2021-03-31 11:36 GMT   |   Update On 2021-03-31 11:36 GMT
தூத்துக்குடி அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் சாலையில் உணவு தடுப்பு பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு முன்பு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள லாரி ஒன்றில் இருந்த பேட்டரிகளை ஒரு வாலிபர் திருடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்த பாலகணேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News