வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள் கேஎஸ் அழகிரி இறுதிகட்ட சுற்றுப்பயணம்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
கே.எஸ்.அழகிரியின் இறுதிகட்ட சுற்றுப்பயணம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற ஏப்ரல் 2-ந் தேதி காலை உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் செய்கிறார். அன்று மாலை கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
3-ந் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்கிறார்.
4-ந் தேதி காலை தென்காசி சட்டமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் செய்கிறார். அன்று மாலை நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.