செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:
காகித ஆலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்று கொண்டிருந்த அண்ணாநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.