செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2021-03-28 08:43 GMT   |   Update On 2021-03-28 08:43 GMT
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த பாவாபக்ருதீன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News