செய்திகள்
குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருட்டு
பாளை அருகே குடோனில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
என்.ஜி.ஓ. காலனி ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பெரியதுரை (வயது27). ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள குடோனில் 3-வது மாடியில் துணிகளை அடுக்கி வைத்து உள்ளார்.
சம்பவத்தன்று குடோன் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ. காலனி ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பெரியதுரை (வயது27). ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர் அதே பகுதியில் உள்ள குடோனில் 3-வது மாடியில் துணிகளை அடுக்கி வைத்து உள்ளார்.
சம்பவத்தன்று குடோன் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.