செய்திகள்
அம்பையில் தம்பி வீட்டில் வாலிபர் மர்ம மரணம்
அம்பையில் தம்பி வீட்டில் வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை மேலப்பாளையம் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள அவரது தம்பி கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அங்கு வினோத் தலையில் படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் சீத்தாலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக்கின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.