செய்திகள்
விபத்து

சரக்கு ஆட்டோ - மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

Published On 2021-03-21 12:30 GMT   |   Update On 2021-03-21 12:30 GMT
மன்னார்குடி அருகே சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தோப்புதெருவை சேர்ந்தவர்கள் ராஜதுரை (வயது22), சதீஷ்(30). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உள்ளிக்கோட்டை கடை தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற லோடு ஆட்டோ ராஜதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜதுரை மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சதீஷ் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த திருவாரூர் மருதபட்டினத்தை சேர்ந்த சதீஷ்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News