செய்திகள்
ராமநாதபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி 2 பேர் பலி
ராமநாதபுரம் அருகே இன்று காலை மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் துபாயில் வேலை செய்துவிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இன்று காலை தனது மருமகன் லோகேஷ்வரன் (16) என்பவரை அழைத்துக் கொண்டு வள்ளிமாடன் வலசை கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அம்மன் கோவில் அருகே அவர்கள் வந்தபோது எதிரே அரசு பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செந்தில்குமார், லோகேஷ்வரன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் துபாயில் வேலை செய்துவிட்டு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இன்று காலை தனது மருமகன் லோகேஷ்வரன் (16) என்பவரை அழைத்துக் கொண்டு வள்ளிமாடன் வலசை கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அம்மன் கோவில் அருகே அவர்கள் வந்தபோது எதிரே அரசு பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செந்தில்குமார், லோகேஷ்வரன் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.