செய்திகள்
திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Published On 2021-03-21 05:46 GMT   |   Update On 2021-03-21 05:46 GMT
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

மேலூர்-சிவகங்கை ரோட்டில் வசிப்பவர் மோகன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அருப்புக்கோட்டை அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News