செய்திகள்
நகை வியாபாரியிடம் 3 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
நகை வியாபாரியிடம் 3 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை பஸ் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்தில் நின்ற பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரியான கோவிந்தராஜ் (வயது 63) என்பவரது துணிப்பையில் 2 கிலோ 971 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசுகள் இருந்தன.
அவர், மதுரையில் இருந்து நகைகளை மொத்தமாக வாங்கி வந்து, அம்பை பகுதியில் உள்ள கடைகளுக்கு வழங்கி விட்டு, மீதியானவற்றை திருப்பி கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால், அவற்றுக்கு உரிய ஆவணம் இல்லாததால், அந்த கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளின் மதிப்பு சுமார்ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.