செய்திகள்
கொள்ளை

ராதாபுரம் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2021-03-12 10:31 GMT   |   Update On 2021-03-12 10:31 GMT
ராதாபுரம் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் குறித்தும் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை, மார்ச்.12-

ராதாபுரம் அருகே உள்ள சிஙகாரதோப்பு பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள் 1 பவுன் எடையுள்ள தங்கதாலி மற்றும் தங்க பொட்டை கொள்ளை அடித்து சென்றனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி சுடலைமுத்து ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.

இதுபோல ராதாபுரம் அருகே உள்ள தெற்கு மேப்பிலான்குளம் கிராமத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலிலும் நேற்று அதிகாலை பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இங்கு கொள்ளையர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 3 கிராம் தங்கதாலி, பொட்டுக்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆறுமுகம் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.

 

இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News