செய்திகள்
கணவர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை
கணவர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பெரும்புள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ். அவருடைய மனைவி உமாராணி (வயது 29). இவர், வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மருதராஜ் உயிரிழந்தார். அவர் இறந்ததில் இருந்தே உமாராணி துக்கத்துடன் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த உமாராணி, கடந்த மாதம் 27-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வடமதுரை அருகே உள்ள பெரும்புள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ். அவருடைய மனைவி உமாராணி (வயது 29). இவர், வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மருதராஜ் உயிரிழந்தார். அவர் இறந்ததில் இருந்தே உமாராணி துக்கத்துடன் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த உமாராணி, கடந்த மாதம் 27-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.