செய்திகள்
தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை

Published On 2021-03-05 12:43 GMT   |   Update On 2021-03-05 12:43 GMT
கணவர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள பெரும்புள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ். அவருடைய மனைவி உமாராணி (வயது 29). இவர், வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மருதராஜ் உயிரிழந்தார். அவர் இறந்ததில் இருந்தே உமாராணி துக்கத்துடன் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த உமாராணி, கடந்த மாதம் 27-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News