செய்திகள்
வழக்கு பதிவு

தேர்தல் விதிமுறையை மீறியதாக மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் மீது வழக்கு

Published On 2021-03-05 09:45 GMT   |   Update On 2021-03-05 09:45 GMT
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவையில் நேற்று முன்தினம் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் எந்த விதமான அனுமதியும் பெறாமல் அக்கட்சியின் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். 

இது குறித்து கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கண்காணிப்பு குழு அதிகாரி கஸ்தூரி மக்கள் நீதி மய்யம் கோவை மத்திய மாவட்ட செயலாளர் பிரபு மீது உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News