செய்திகள்
கடையம் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம:
கடையம் அருகே உள்ள கருத்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாடக்கண்ணு (வயது 58). மாடு வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 22 ஆயிரத்திற்கு ஒரு மாட்டை வாங்கினார். பின்னர் அந்த மாடு உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் மாடக்கண்ணு மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.